ஏ.ரீ.எம், கடன் அட்டை சேடியில் ஈடுபட்ட 11 இலங்கையர்கள் மலேஷியாவில் கைது
Read Time:1 Minute, 18 Second
ஏ.ரீ.எம் இயந்திரத்தை உடைத்து பணம் பெற்ற மற்றும் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கையர்கள் 11 பேர் மலேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச, மலேஷிய மற்றும் கனடா பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஏ.ரீ.எம் மற்றும் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட 25 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் இலங்கையர்கள் எனவும் ஏனையவர்கள் கனடா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் மலேஷிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இவர்கள் ஏ.ரீ.எம் மற்றும் கடன் அட்டை மோசடி மூலம் பல வங்கிகளிலிருந்து பணத்தை பெற்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 533 கடன் அட்டைகள், 4 மடிக் கனணிகள் மற்றும் பல்வேறு நாட்டு நாணயங்களும் மீட்கப்பட்டுள்ளன.
Average Rating