கால்பந்து : நெதர்லாந்து, மெக்சிகோ, போர்ச்சுகல் வெற்றி!

Read Time:1 Minute, 25 Second

W.Football.jpgஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் நேற்று நடந்த முதல் சுற்றில் நெதர்லாந்து, மெக்சிகோ, போர்ச்சுகல் அணிகள் வெற்றி பெற்றன! செர்பியா அண்ட் மோண்டிநீக்ரோ அணி சிறப்பாக விளையாடினாலும், 44வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு நெதர்லாந்து வீரர் ரோபின் அருமையான கோல் ஒன்றை அடித்தார். இதனையடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி வென்றது.

மற்றொரு போட்டியில் மெக்சிகோ அணியும், ஈரான் அணியும் மோதின. முதல் பாதி வரை தலா 1 கோல் அடித்து இரு அணிகளும் சம நிலையில் இருந்தன. ஆட்டத்தின் 2வது பாதியில் மெக்சிகோ அணி சிறப்பாக விளையாடி மேலும் 2 கோல்களை அடித்து 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

போர்ச்சுகல் – அங்கோலா அணிகளுக்கு இடையேயான போட்டியில், போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நேபாள மன்னரின் அதிகாரங்கள் பறிப்பு பொம்மையாக்கப்பட்டார் ஞானேந்திரா
Next post சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக றொசான் குணதிலக்க பொறுப்பேற்பு