ஹிஜாப் அணிய வேண்டாமென கூறி முஸ்லிம் மாணவிகள் மீது தாக்குதல்
Read Time:1 Minute, 15 Second
மாத்தறை திக்வல்லை பகுதியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் மாணவிகள் மாத்தறையில் வைத்து இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளனர். நேற்றுமாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திக்வல்லையிலிருந்து மாத்தறைக்கு மாலைவகுப்புக்கு மூன்று முஸ்லிம் மாணவிகளும் தனியாக சென்றுள்ளனர். வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது மாத்தறை மகானாம பாலத்தின் அருகில் வைத்து தடிகளுடன் வந்த சிங்கள இளைஞர்கள் சிலர் இவர்களைத் தாக்கியூள்ளனர். இனிமேல் ஹிஜாப்இ அபாயா அணியக்கூடாது என்றும் பொலிஸில் புகார் செய்யக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். பயத்தினால் பொலிஸாருக்கு அறியப்படுத்தாது வீடு திரும்பியூள்ளனர். பிறகு பெற்றௌருடன் வந்து பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
Average Rating