யுவதி லொறி மோதி பலி!
Read Time:1 Minute, 16 Second
அம்பலாங்கொட – பலபிட்டி நீதிமன்ற வளாகத்தில் லொறியொன்றில் மோதுண்டு இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பலபிட்டியைச் சேர்ந்த 21 வயதுடைய ரிஷாக்யா நதீஷானி என்ற யுவதியே உயிரிழந்தவராவார். இவர் கடந்த முறை உயர்தர பரீட்சையில் சித்திபெற்று ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்து நாளை (11) பல்கலைக்கழகத்தில் சேரவிருந்தார். இந்த நிலையில் தாயுடன் பலபிட்டி தனியார் வைத்திய நிலையத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த வேளை, இன்று (10) காலை 09.35 அளவில் சிறிய ரக லொறியில் மோதுண்டு ரிஷாக்யா நதீஷானி உயிரிழந்துள்ளார். விபத்தை அடுத்து லொறியின் சாரதி தப்பிச் சென்றுவிட்டதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating