கைவிடப்பட்ட குழந்தை மீட்பு

Read Time:1 Minute, 31 Second

ANI.Child.babies29காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தையொன்று காத்தான்குடி பொலிஸாரிடம் இன்று புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதியொன்றின் மரத்தடியின் கீழிருந்தே அந்த குழந்தை இன்று மாலை 6 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கு இதை தெரியப்படுத்தியதையடுத்து, ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸாரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. பொலிஸார் இக்குழந்தையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கைவிடப்பட்ட குழந்தை ஆண் குழந்தை எனவும் இக்குழந்தைக்கு சுமார் ஐந்து மாதம் இருக்கலாம் என தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 நேட்டோ வீரர்கள் பலி
Next post காதலனுடன் குஜால் பண்ணும் இலங்கையின் இளம் அரசியல்வாதி! (PHOTOS)