தேசத்தின் மகுடம் கண்காட்சிக்கு மகுடம் சேர்த்த புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள்.. (PHOTOS)
அம்பாறையில் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சிக்கு மகுடம் சேர்ப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களான இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் கலை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
புனர்வாழ்வு வழங்கப்பட்ட பின் சிவில் பாதுகாப்பு படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் இந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள்.
ஐக்கியம், தேசிய நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை பிரஜைகள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் ஜனாதிபதி செயலகமும், ஜனாதிபதியின் சமூக அபிவிருத்திப் பிரிவும் சேர்ந்து இந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் திறமைக்கு களம் அமைத்துக் கொடுத்து இருந்தன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆசிர்வாதத்துடன், நாமல் ராஜபக்ஸ எம்.பியின் சிந்தனையை உள்வாங்கி, ஜனாதிபதியின் சமூக அபிவிருத்திப் பிரிவுப் பணிப்பாளர் நந்தன விக்கிரமசிங்க இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொடுத்து இருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிப் பெண்கள் தென்னிந்திய பாடல்களுக்கு போட்ட ஆட்டம் சபையோரை பெரிதும் கவர்ந்தது.
Average Rating