பச்சிளம் குழந்தையை வல்லுறவுக்குட்படுத்திய பாதகனுக்கு சிறை
Read Time:1 Minute, 10 Second
பதினொருமாத பச்சிளம் குழந்தையை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றத்துக்காக குற்றவாளியாகக் காணப்பட்ட நபரொருவருக்கு களுத்துறை உயர் நீதிமன்ற நீதியரசர் திலகரத்ன 20வருட கடூழிய சிறைத்தண்டனையும் 20 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராதத்துக்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட குழந்தைக்கு எட்டு இலட்சம் ரூபாவை நஷ்டஈடாக வழங்கும்படியும் நீதியரசர் உத்தரவிட்டுள்ளார். 2004ம் ஆண்டு செப்டெம்பர் 23ம் திகதி இந்நபர் இக்குற்றத்தை மேற்கொண்டதாக இவர்மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.களுத்துறை, நாகொட வைத்தியசாலை வைத்தியரொருவரும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
Average Rating