கிளிநொச்சி விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி
Read Time:1 Minute, 22 Second
கிளிநொச்சி பரந்தன் ஏ35 வீதியில் பூங்காவனச் சந்தியில் நேற்றுமாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டதுடன், மற்றொருவர் காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு;ளளார். பரந்தன் மயான வீதியைச் சேர்ந்த கந்தசாமி பாலஸ்ரீ (வயது46) என்பவரே உயிரிழந்துள்ளார். ஏ35 வீதியில் பரந்தனை நோக்கி சைக்கிளில் சென்ற இருவரை பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதித் தள்ளியதில் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்தவர் அந்த இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றவரான கண்டாவளையைச் சேர்ந்த எஸ்.ரஜீவன் (வயது21) என்பவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் அந்த இடத்திலேயே மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டுத் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Average Rating