ஆஸி. செல்ல முனைந்த 35பேர் களுத்துறையில் கைது
Read Time:1 Minute, 5 Second
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த 35பேர் களுத்துறை மாவடடம் பேருவளைக் கடலில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளனர். பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த இவர்கள், காலி கடற்படையினரால் கைது செய்யப்பட்டு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். இவர்களுள் 11 பெண்கள் அடங்குகின்றனர். மஹபாகே, அம்பாறை, திருமலை, வவுனியா, கிளிநொச்சி, பேருவளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating