உருகுலைந்த சிங்ககொடிகளை விற்ற வர்த்தகர்கள் அறுவருக்கு சிறை
Read Time:1 Minute, 19 Second
சிதைந்த சிங்க படத்தைக்கொண்ட தேசிய கொடிகளையும் உருகுலைந்த இலங்கையின் அரச இலச்சினைகளையும் பொதுமக்களுக்கு விற்றதாக கூறப்பட்ட புறக்கோட்டை வர்த்தகர்கள் ஆறுபேருக்கு கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கபுலி ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டுவருட சிறைதண்டனையை நேற்று வெள்ளிக்கிழமை விதித்தார்.
இலங்கை குடியரசை அவமதிக்கும் வகையில் புறக்கோட்டை பீபல்ஸ்பாக் கடைத்தொகையில் தமது கடையில் உருக்குலைந்த தேசிய கொடிகளையும் அரச இலச்சினைகளையும் விற்றதாக இவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டது.
சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் தேசிய கொடி அரச இலச்சினை என்பவற்றை விற்கும்போது கவனமாக இருக்கவேண்டும் என்று எச்சரித்த நீதவான் தலா 1000 ரூபா தண்டம் விதித்துடன் ஒத்திவைத்த சிறைத்தண்டயையும் வழங்கினார்.
Average Rating