கிளிநொச்சியில் வாகன விபத்து பிரித்தானியாவில் இருந்து சென்ற கணவன்- மனைவி பலி!

Read Time:1 Minute, 24 Second

accident-004கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மனைவி ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி 55ம் கட்டை பகுதியில் விசுவமடுவில் இருந்து வந்த பேருந்தும் இரணைமடுவில் இருந்து வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்தில் நெடுங்கேணியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் தெய்வேந்திரகுமார் (வயது 66) அவரது மனைவியான ஸ்ரீரதி தெய்வேந்திரகுமார் (வயது 58) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியல் அழுத்தத்தில் சந்தேகநபர்கள் விடுவிக்கப் படவில்லை -சட்டமா அதிபர்
Next post உலகின் முதற் தர குழந்தைகள் ஆபாசப்பட விநியோகஸ்தர் கைது