யாழ்ப்பாணத்தில் சிறுமியை கடத்த முற்பட்டவர் கைது
யாழ்.பஸ் நிலையத்தில் வைத்து நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் 4வயது சிறுமியொருவரை கடத்த முயற்சித்த இளைஞர் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து அச்சுவேலியிலுள்ள தனது உறவினரை பார்க்கவென இரண்டு பெண் பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் பஸ்ஸில் வந்திறங்கியுள்ளனர். வந்து இறங்கியவர்கள் பிள்ளைகளை பஸ்ஸிலிருந்து இறக்கி பஸ்ஸின் அருகில் நிறுத்தி விட்டு, தமது பொருட்களை பஸ்ஸில் இருந்து கீழே இறக்கியுள்ளனர்.
இதன்போது அந்த இடத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் சிறுமியுடன் தந்திரமாக பேசி பஸ் நிலையத்திற்கு பின்புறமாக அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளார். இதனைக் கண்ட தாய் அபயக்குரல் எழுப்பியுள்ளார்.
அதனையடுத்து பஸ் நிலையப்பகுதியில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸார் குறித்த இளைஞரை துரத்திச் சென்று பழைய தபாற் கந்தோர் வீதியில் வைத்து அவரை மடக்கி பிடித்துள்ளனர். சிறுமி காப்பாற்றப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டதுடன் இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். விசாரணைகள் இடம்பெறுகின்றன.
Average Rating