ஆஸியில் இலங்கையர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Read Time:1 Minute, 43 Second

australian.flagஅவுஸ்திரேலியாவில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளாகள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியோர் என அடையாளப்படுத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

25 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் மேலும் இரு பர்ம புகலிடக் கோரிக்கையாளர்களும், ஒரு ஈரானிய புகலிடக் கோரிக்கையாளரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர். மெல்பர்ன் புரோட்மெடோவஸில் உள்ள குடிவரவு தற்காலிக முகாமில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கால வரையறையின்றி தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் வருத்தம் வெளியிட்டுள்ளனர். விடுதலை செய்ய முடியாவிட்டால் கருணை அடிப்படையில் தங்களை விடுதலை செய்யுமாறு புகலிடக் கோரிக்கையாளர்கள் கோரியுள்ளனர். ஆசியோவின் பாதுகாப்பு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சில புகலிடக் கோரிக்கையாளர்கள் சில ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாகபாம்பு பெண் நாட்டை விட்டு தப்பியோட்டம்
Next post முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.. (PHOTOS)