தாய்லாந்து பஸ் விபத்தில் 7 மாதக் குழந்தை உட்பட ஐவர் பலி

Read Time:1 Minute, 41 Second

495busதாய்லாந்து நாட்டின் மலைப்பகுதியில் இன்று அதிகாலை பஸ் ஒன்று குடைசாய்ந்தில் 7 மாதக் குழந்தை உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு உடந்தெனி மாகாணத்திலிருந்து சியாங் மாய் எனும் நகருக்கு புறப்பட்டுச் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ் பேங்கொக்கிலிருந்து 380 தொலைவிலுள்ள இடத்தில் வைத்தே விபத்துக்குள்ளாகியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தின் போது பஸ் 20 மீற்றர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளது என விபத்துக்குள்ளானவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண் மற்றும் 7 மாதக் குழுந்தை உட்பட 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் 53 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ப்ரேக் தொகுதி செயலிழந்தமையே இவ்விபத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.. (PHOTOS)
Next post சினிமா இயக்குனர், சித்தி கொடுமை நடிகை அஞ்சலி கண்ணீர் பேட்டி: ஐதராபாத்தில் திடீர் தஞ்சம் (VIDEO)