விமான சாகசக் கண்காட்சியொன்றின் போது விமானமொன்று விபத்து

Read Time:1 Minute, 23 Second

ANI.Flight.6டொமினிக்கன் குடியரசில் விமான சாகசக் கண்காட்சியொன்றின் போது விமானமொன்று விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துள்ளது. இதனால் இரு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.

கரீபியன் நாடுகளில் ஒன்றான டொமினிக்கன் குடியரசில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இவ்விபத்தை நேரில் பார்த்த பலர் அதிர்ச்சியடைந்தனர்.
25 வயதான கார்லோஸ் மனுவெல் கிறேரோ, 27 வயதான ரபாயெல் சான்செஸ் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

நான்காவது வருடமாக நடைபெற்ற இக்கண்காட்சியில் டொமினிக்கன் விமானப்படை விமானிகள் மற்றும் சர்வதேச விமானிகள் பலர் பங்குபற்றினர்.

பல விமானங்கள் ஒன்றாக பறந்து கொண்டிருந்த போது ஒரு விமானம் கட்டுப்பாட்டை இழந்து கடலில் வீழ்ந்தது.

இவ்விமான சாகசக் கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவிருந்தது. ஆனால், இவ்விபத்தையடுத்து உடனடியாக கண்காட்சி நிகழ்ச்சிகள் இரத்துச் செய்யப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 11 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு
Next post அனைத்து திரைப்படங்களையும் தடை செய்ய வேண்டும்