கட்டார் விபத்தில் இரு இலங்கையர்கள் பலி பலர் படுகாயம்!

Read Time:1 Minute, 42 Second

accident-001டோகா கட்டாரின் ராஸ் அபு அபோட் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இலங்கையர்கள் உயிரிழந்ததோடு பலர் படுகாயமடைந்துள்ளனர்.

போக்குவரத்து சமிஞ்சை விளக்குக்கு அருகில் நேற்று முன்தினம் புதன்கிழமை இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் வெளியிடப்படாத நிலையில் இலங்கை, நேபாளம், பிலிபைன்ஸ் ஆகிய நாட்டு பிரஜைகளே அதிகம் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் இரு இலங்கையர்கள் பலியானதோடு மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

கட்டாரில் சாரதியாக பணிபுரிந்த 33 வயதுடைய அப்துல் ஹமீட் மொஹமட் பைசான் என்பவரும் தொழில் புரிந்த 27 வயதுடைய எம்.என்.பிரசன்ன ருவான் என்பவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

எம்.என்.பிரசன்ன ருவான் அநுராதபுரத்தையும் அப்துல் ஹமீட் மொஹமட் பைசான் குருநாகல் மாவட்டத்தையும் சேர்ந்தவர்களாவர். ருவானின் சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பைசானின் ஜனாசா கட்டாரில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரும்புப் பெண்மணி ஜெயலலிதா: அமெரிக்கா பாராட்டு -விக்கிலீக்ஸ்
Next post உள்ளாடை போடாததன் விளைவு… இப்படித்தான் இருக்கும்! (PHOTOS)