புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கான சித்திரை புத்தாண்டு

Read Time:1 Minute, 27 Second

ltte.girls-001இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்து அல்லது இடம்பெயர் முகாம்களில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கான சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் இன்றையதினம் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விளையாட்டு நிகழ்வில் மருதமடு, கந்தக்காடு, சேனபுர மற்றும் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து புனர்வாழ்வு பெறும் ஆண், பெண், முன்னாள் புலி உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே, புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்சன் ஹெட்டியாராச்சி, வவுனியா நகரசபையின் தலைவர் ஐ.கனகையா உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் விசாரணை
Next post சிறுமிமீது பாலியல் துஷ்பிரயோகம், இளைஞன் கைது