உயிருக்கு போராடிய காதலிக்கு விஷம் கொடுத்த காதலன்
காதல் விவகாரத்தினால் மனமுடைந்த காதலி தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்காக போராடி கொண்டிருந்த நிலையில் அவருக்குடி விஷத்தைக் கொடுத்துவிட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உயிருக்காக போராடி கொண்டிருந்த காதலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு சென்றே காதலன் பாலில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார்.
மருத்துவ பீடத்தைச்சேர்ந்த மாணவர்கள் இருவரே இவ்வாறு பலியாகியூள்ளனர். மொரட்டுவை பல்கலைகழக மாணவி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போதே வடகொழும்பு வைத்திய பீடத்தைச்சேர்ந்த இறுதியாண்டு மாணவன் பாலில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இதில்இ பேராதனை மாரஸ்ஸன்ன ஒலுவாவத்தையில் வசிக்கும் மொரட்டுவை பல்கலைகழகத்தை சேர்ந்த 24 வயது மகேஷிகா பிரியங்கி குலரத்ன என்ற மாணவியூம் அவரது காதலன் என்று சொல்லப்படுகின்ற பொல்ஹாவலையைச் சேர்ந்த 25 வயதான அமில சத்துரங்க என்ற மாணவனுமே பலியாகியூள்ளனர்.
Average Rating