ஆசிரியர் ஒருவரின் வீட்டின் முன்பாக மண்டை ஒடு
Read Time:1 Minute, 18 Second
திருகோணமலை நகரில் உள்ள பிரபல்யமான ஆண்கள் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டின் முன்பாக மண்டை ஒடு வைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மண்டையோட்டுடன் எச்சரிக்கை செய்யும் வாசகம் அடங்கிய பதாதையும் வைக்கப்பட்டுள்ளது.
அதில் பாடசாலை மாணவர்களது சிகை அலங்கார விடயங்களில் அடிமைப்படுத்த வேண்டாம் என எழுதப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்றும் உரிமை கோரப்பட்டுள்ளது.
ஆசிரியரின் வீட்டிற்கு முன்பாக நேற்று புதன்கிழமை இரவே மண்டையோடு வைக்கப்பட்டுள்ளது. இன்றுஅதிகாலை கதவைத் திறந்த ஆசிரியர் இதனைக் கண்டு அச்சமடைந்ததுடன் இது தொடர்பில் திருமலை பொலிஸிற்கும் தெரியப்படுத்தியுள்ளார். ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளதுடன் இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating