பிறந்து மூன்றே நாளான சிசுவை நரபலி கொடுத்த கொடூரம்
Read Time:1 Minute, 13 Second
சிலி நாட்டில் உள்ள வல்பரைசோ துறைமுகத்துக்கு அருகில் கொல்லிகுவே என்ற மலை பாங்கான இடமுள்ளது. அங்கு வந்த 4 பேர் கும்பல், பிறந்து 3 நாளே ஆன ஒரு குழந்தையை எடுத்துச் சென்று உயிரோடு எரித்து நரபலி கொடுத்துள்ளனர்.
இக்குழுவின் தலைவன் ரமோன் கஸ்டாவோ. இவன் அந்த குழந்தை மதத்துக்கு எதிரானது என்றும் உலகம் அழியப் போகிறது என்றும் கூறி மற்றவர்களை நம்ப வைத்துள்ளான்.
இதையடுத்து அந்த குழந்தையை உயிரோடு எரிக்கும் கொடூர சடங்கை அவனது குழுவை சேர்ந்தவர்கள் நடத்தி உள்ளனர்.
குழந்தையின் தாயையும் நம்ப வைத்து இந்த கொடூர உயிர் பலியை நடத்தியுள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் இந்த உண்மை வெளியாகி இருக்கிறது. கொலை செய்யப்பட்ட குழந்தையில் தாய் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Average Rating