முல்லா உமர் உறவினர் உள்பட தலிபான் தீவிரவாதிகள் 37 பேர் சாவு

Read Time:1 Minute, 21 Second

Afganistan.jpgஆப்கானிஸ்தானில் கடந்த 2 நாளில் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 37 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். உரூஸ்கான் மாகாணம், சியாசாவ் கிராமத்தில் நேற்று முன்தினம் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அமெரிக்க கூட்டுப்படைகள் அந்த இடத்தை சுற்றி வளைத்தன. அப்போது நடந்த சண்டையில் தலிபான் இயக்க தலைவன் முல்லா உமரின் மைத்துனர் முல்லா அமானுல்லா உள்பட 14 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 6 பேர் உயிருடன் பிடிபட்டனர்.

ஹெல்மான் மாகாணத்தில் உள்ள சாங்கின் மாவட்டத்தில் ஆப்கான் படைகளும், இங்கிலாந்து ராணுவமும் நடத்திய தேடுதல் வேட்டையில், 10 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இங்கிலாந்து வீரர் ஒருவரும் இறந்தார்.

இதுபோல தெற்கு காந்தகாரில் உள்ள சைதான் கிராமத்தில் நடந்த மோதலில் 12 தலிபான் தீவிரவாதிகள் பலியானார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உலகக் கோப்பை : ஆடியது டோகோ! வென்றது கொரியா!
Next post இறுதியாக நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் மொத்தம் 614 பேர் கொல்லப்பட்டுள்ளனர்- பாதுகாப்பு அமைச்சு