இன்னும் ஒரு கோடியையே எட்டவில்லை- சமந்தா!!
கடந்த ஆண்டு சமந்தாவுக்கு சினிமாவில் நல்ல பிரகாசமான எதிர்காலம் இருந்தது. ஆனால், அதிலும் ஒரு துரதிர்ஷ்டம் அவருக்கு தோல் அலர்ஜி நோய் ஏற்பட்டதால், கடல், ஐ என்ற இரண்டு படங்களில் இருந்து வெளியேறினார். ஆனபோதும், விழுந்த மார்க்கெட்டை இப்போது தூக்கி நிறுத்தி விட்டார்.
தமிழில் முன்னணி நடிகை இடத்துக்கு வரவில்லை என்றபோதும், தெலுங்கில் இப்போது அவர்தான் நம்பர்-ஒன். அந்த வகையில் அரை டஜன் படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில், சமந்தாவின் படக்கூலி 1 கோடியே 75 லட்சமாக உயர்ந்து நிற்பதாக ஆந்திராவில் செய்தி பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ளார் சமந்தா.
இப்போது தெலுங்கில் நான் நடிக்கிற படங்கள் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்காக நான் சம்பளத்தையெல்லாம் உயர்த்தவில்லை. படாதிபதிகளாக கொடுப்பதைத்தான் வாங்கிக்கொள்கிறேன்.
அதிலும் ஒரு கோடியே 75 லட்சம் வாங்குவதாக சொல்வது அப்பட்டமான பொய். இன்னும் நான் ஒரு கோடியையே எட்டவில்லை என்கிறார் சமந்தா.
Average Rating