பழிக்கு பழி வாங்க துப்பாக்கியால் சுட்ட வாலிபருக்கு ஆயுள்!!

Read Time:2 Minute, 51 Second

imagesமுன்விரோதத்துக்கு பழிவாங்க விருந்தில் கலந்து கொண்டவரை வெளியே அழைத்து சுட்டவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது 2 கூட்டாளிகளுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:வட கிழக்கு டெல்லி முஸ்தபாபாத்தை சேர்ந்தவர் சாஜித்.

அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நதீம்(25) என்பவருக்கும் இடையே ரம்ஜான் அன்று மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் நதீமை சாஜித் கடுமையாக அடித்து உதைத்தார்.அதற்கு பழிக்கு பழி வாங்க நதீம் சரியான நேரத்துக்காக காத்து இருந்தார். சம்பவத்தன்று சாஜித் வீட்டில் ஒரு விழா நடந்து கொண்டிருந்தது.

அந்த விழாவுக்கு நதீமும் அவரது நண்பர்களான நைமுதீன்(22) மற்றும் ஹைதர்(23) ஆகியோரும் சென்றனர். விழாவில் இருந்த சாஜித்தை வெளியே வரும்படி நதீம் அழைத்தார். நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த சாஜித், ‘என்னை ஏன் அழைத்தாய்’ என்று நதீமிடம் கேட்டார்.

உடனே நதீம்,‘ ரம்ஜானின்போது என்னை அடித்ததற்கு இன்று உன்னை பழிவாங்க போகிறேன்’ என்று கூறியபடி துப்பாக்கியை சாஜித்தை நோக்கி நதீம் நீட்டினார்.உடனே சாஜித் அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் அவரை ஓடவிடாமல் நைமுதீனும் ஹைதரும் பிடித்து கொண்டனர்.

உடனே நதீம் சாஜித்தை சுட்டார். இதனால் சாஜித்தின் முதுகில் குண்டு பாய்ந்தது. நதீமும் அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். நதீம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து நதீமையும் அவரது நண்பர்களையும் கைது செய்த னர்.

அவர்கள் மீது டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை கூடுதல் செசன்ஸ் நீதிபதி டி.எஸ்.காஷ்யப் விசாரித்து நதீமுக்கு ஆயுள் தண்டனையும், அவரது கூட்டாளிகளான நைமுதீன் மற்றும் ஹைதர் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தி.மலையில் கிரிவலம் ஆசிரியையிடம் 10 பவுன் நகை பறிப்பு!!
Next post பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?