அமெரிக்க நிதியுதவியைப் பெற்றுக் கொண்டால் இலங்கையின் இறைமையைப் பாதிக்கும்!!
Read Time:1 Minute, 17 Second
அமெரிக்காவின் நிதி உதவியை பெற்றுக்கொண்டால் அது நாட்டின் இறைமையை பாதிக்கும். அதனால் அந்நாட்டின் நிதி உதவி தேவையில்லை என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பை மேம்படுத்த அமெரிக்கா 3.5 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதாக அறிவித்திருந்தது.
எனினும், இந்த உதவித் திட்டத்தில் நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படக் கூடிய நிலையில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாகவே நிதி உதவியை நிராகரித்தோம் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீதிமன்றக் கட்டமைப்பின் மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை உரிய முறையில் பயன்படுத்தத் தவறியதனால் உதவிகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating