ராணுவ வீரரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பெண்கள்!!
ஜிம்பாப்வே நாட்டில் காரில் லிப்ட் கேட்ட ராணுவ வீரரை பெண்கள் சிலர் கடத்திச் சென்று நான்கு நாட்கள் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணிக்காலாந்து மாகாணத்தில் உள்ள முடாரே நகரில் கடந்த 19ம்தேதி நள்ளிரவு பஸ்சுக்காக ராணுவ வீரர் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி ‘லிப்ட்’ கேட்டார். காரினுள் இருந்த ஒரு ஆணும், 2 பெண்களும் அவரை ஏற்றிக்கொண்டனர்.
சற்றுதூரம் சென்றதும் கார் வேறு வழியாக செல்லவே, சந்தேகம் அடைந்த ராணுவ வீரர், தன்னை இறக்கிவிடும் படி கூறினார்.
உடனே காரை ஓட்டிய நபர் கத்தியைக் காட்டி மிரட்டினார். பெண்களில் ஒருத்தி அவரது கண்ணை துணியால் கட்டினாள். அடையாளம் தெரியாத இடத்தில் தனிமையான ஒரு வீட்டிற்கு ராணுவ வீரரை அவர்கள் கடத்திச் சென்றனர். அங்கு அவரை நிர்வாணப்படுத்தி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்ட 2 பெண்களும் பலவந்தமாக அவருடன் உறவில் ஈடுபட்டனர்.
4 நாட்கள் மாறி, மாறி பலமுறை கட்டாய உடலுறவில் ஈடுபட்ட பின்னர், கடந்த 23ம் தேதி மீண்டும் கண்ணைக் கட்டி காரில் அழைத்து வந்து முடாரே நகர் அருகில் உள்ள டங்கமுவாரா மலைப் பகுதியில் இறக்கி விட்டனர்.
போனவர்கள் சும்மாவிட்டுவிட்டு போகாமல் மலையோரம் இருந்த பெரிய கல்லை எடுத்து அவரது இடது காலை காயப்படுத்தி விட்டு அவர்கள் காரில் தப்பிச் சென்றனர்.
ஒரு வழியாக ராணுவ வீரர் தட்டுத் தடுமாறி எழுந்து போய் முடாரே நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அந்த பெண்களையும், அவர்களுடன் இருந்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Average Rating