தயாரிப்பாளரான விஜய் சேதுபதி!!

Read Time:1 Minute, 56 Second

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, தான் நடித்த முதல்படமே தேசிய விருது பெற்றது.

வி.சேதுபதிதொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர்.

இப்போது அரை டஜன் படங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி, புதிதாக விஜய் சேதுபதி புரொடக்ஷ்ன் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சொந்தப் பட நிறுவனம் ஆரம்பித்து இருப்பது உண்மை தான்.

இயக்குனர் ஹரியின் உதவியாளர் சுதாகர் தான் என் முதல் படத்தை இயக்குகிறார். படத்தின் பெயர் “சங்கு தேவன்”.

நான் தான் நாயகனாக நடிக்கிறேன். நாயகி இன்னும் முடிவாகவில்லை. படத்தின் கதைக்களம் திண்டுக்கல்லில் நடக்கிறது.

“அட்டக்கத்தி”, “பீட்சா” படங்களில் அருமையான இசை கொடுத்த சந்தோஷ் நாரயணன் தான் என் முதல்பட தயாரிப்பிற்கு இசையமைக்கிறார்.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் எல்லா விடயங்களும் இந்த படத்தில் இருக்கும். யூன் மாதம் படப்பிடிப்பை தொடங்குகிறோம்.

என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் நிச்சயமாக நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு தருவேன் என்று பெருமையாக கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவனுக்கு காதல் பாடம் புகட்டிய ஆசிரியைக்கு தர்ம அடி!!
Next post மரத்தில் தூக்குபோட்டு காதல் ஜோடி தற்கொலை சிறுத்தையை விரட்டி சடலங்கள் மீட்பு!!