வான்கடே மைதானத்தில் நுழைய தடை நீடிப்பு : ஷாருக்கான் வருத்தம்!!

Read Time:2 Minute, 21 Second

imagesமும்பை வான்கடே மைதானத்தில் நுழைய ஷாருக்கானுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளதால் இன்று மும்பை-கொல்கத்தா மோதும் போட்டியை அவர் நேரில் பார்க்க முடியாது. நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளராக உள்ளார். அவர் கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது மும்பை வான்கடே மைதானத்தில் குடிபோதையில் பாதுகாவலர்களை தாக்கியதாக புகார் கூறப்பட்டது.

மைதானத்துக்குள் நுழைய முயன்ற அவரது குழந்தைகளை பாதுகாவலர்கள் தடுத்ததால் ஆவேசம் அடைந்த ஷாருக்கான் இந்த செயலில் ஈடுபட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து நடந்த சம்பவத்துக்காக ஷாருக்கான் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவம் பற்றி மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பாதுகாவலர்களை தாக்கி அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக வான்கடே மைதானத்தில் நுழைய நடிகர் ஷாருக்கானுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 6-வது ஐ.பி.எல். போட்டி நடைபெற்று வருகிறது.

நடிகர் ஷாருக்கான் தனது கொல்கத்தா அணி மோதும் போட்டிகளை நேரில் பார்த்து வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

இன்று கொல்கத்தா அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது. இந்தப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

வான்கடே மைதானத்தில் நுழைய ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிப்பதால் அவர் இன்று நடைபெறும் போட்டியை நேரில் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஷாருக்கான் வருத்தத்தில் உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலம் அருகே இளம்பெண் தற்கொலை!!
Next post பிரித்தானிய மகாராணி இலங்கை வர மாட்டார்!!