கைதடி பஸ் விபத்தில் 31பேர் காயம்!!
Read Time:1 Minute, 5 Second
யாழ் கைதடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 31 பேர் காயமடைந்துள்ளனர் இந்த விபத்து இன்று முற்பகல் இடம்பெற்றதாக சாவக்கச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதடி பாலத்தில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியாசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தை தொடர்ந்து குறித்த பாலத்தின் ஊடான போக்குவரத்து நடவடிக்கைகள் சில மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating