தந்தையின் நண்பரால் பாலியல் தொல்லைக்கு உள்ளான ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சிறுமிகள்!!
Read Time:1 Minute, 23 Second
தந்தையின் நண்பரால் பாலியல் தொல்லைக்கு உள்ளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுமிகளை, குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தத்தெடுத்துள்ளது.
இடுக்கி, பைனாவ் பகுதியில் ஒரு குடும்பத்தில், 6 முதல் 12 வயது வரையிலான, நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தலைவர், தினமும் இரவில் குடிபோதையில் தங்கப்பன் 47, என்பவரை, அழைத்து வந்துள்ளார்.
தங்கப்பன், குடும்ப வறுமையை, சாதகமாக்கி, சிறுமிகளுக்கு, தின்பண்டங்கள் கொடுத்து, பாலியல் தொல்லை செய்து உள்ளார்.
இது குறித்து புகார் எழுந்தது. தங்கப்பனை, பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொரு வழக்கில், சிறுமிகளின் தந்தையையும் கைது செய்தனர்.
சிறுமிகள், தாயுடன் வசித்த போதிலும், பாதுகாப்பற்ற நிலையில் இருந்தனர். இதை அறிந்த கேரள அரசு, குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம், இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டது.
Average Rating