ஆயுதப் படை வளாகத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது வேலூரில் பரபரப்பு!!
Read Time:1 Minute, 8 Second
வேலூர் ஆயுதப் படை வளாகத்தில் இன்று துப்பாக்கியை சுத்தம் செய்த போலீஸ்காரரின் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் கஸ்பா பகுதியில் காவல் துறை ஆயுதப் படை வளாகம் உள்ளது.
இங்கு, சுமார் 650க்கும் மேற்பட்ட போலீசார் உள்ளனர். இன்று காலை ஆயுதப் படை காவலர் ஒருவர் துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்பாது, துப்பாக்கி விசை மீது அவரது விரல் பட்டதில் குண்டு சீறி பாய்ந்தது.
அந்த குண்டு ஆயுதப் படை வளாகத்தின் சிமென்ட் கூரையில் பட்டு சிதறியது. இதனால் யாருக்கும் பாதிப்பில்லை. திடீரென துப்பாக்கி வெடித்த சப்தம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating