அம்பத்தூரில் ஒரே நாளில் பெண் உள்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை!!
அம்பத்தூர் சண்முகபுரம் இந்திராநகர் கோரை தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (44). கூலி தொழிலாளி. மனைவி சங்கீதா. இவர், நேற்று வீட்டில் தனியாக இருந்த ராமலிங்கம் தூக்கிட்டு இறந்தார்.
குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. அம்பத்தூர் கருக்கு மெயின்ரோடு புதுதெருவை சேர்ந்தவர் ஜெகன் (23). கூலி தொழிலாளி. மனைவி ஹேமலதா (20). ஜெகன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை ஹேமலதா கண்டித்துள்ளார்.
கணவருடன் சண்டை போட்டு விட்டு ஹேமலதா பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த ஜெகன் தூக்குப்போட்டு இறந்தார். அம்பத்தூர் ஐசிஎப் காலனி ராம்பூர்ணா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி.
துபாயில் பணியாற்றுகிறார். மனைவி ஹேமலதா (34). தம்பதியினருக்கு தாய் வருண் (7) மகன் இருக்கிறான். கடந்த 1ம் தேதி, பழனிச்சாமி லீவில் அம்பத்தூருக்கு வந்து இருந்தார்.
இந்நிலையில், இன்று காலை ஹேமலதா தூக்கில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Average Rating