நிருபர்கள் மீது கோபத்தில் ஸ்ருதிஹாசன்!!
தமிழ் பத்திரிகை நிரூபர்கள் எதாவது ஒரு நடிகையைப் பற்றி எழுதி நோகடிப்பது தான் அவர்களின் ஆசையோ என்னவோ என்று ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
எந்த நடிகையாக இருந்தாலும் அவர்களைப் பற்றிய விடயம் உண்மையா, பொய்யா என்று தெரியாமலையே இப்படியெல்லாம் செய்து வருகிறார்கள்.
சமீபத்தில் ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விட்டார். இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டார் என்று எழுதுகிறார்கள்.
நான் எப்போதாவது அப்படி பேட்டி கொடுத்தேனா?… யூகம் அடிப்படையில் எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்.
3 படத்திற்கு பின்பு தமிழில் நடிக்கவில்லை என்பது உண்மை தான். காரணம் தெலுங்கில் பலுபு, ஏவடு, ராமையா வஸ்தாவையா, ரேஸ்குராம் என நான்கு படங்களில் நடித்து வருகிறேன்.
அதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்திப் படங்களிலும் நடித்து வருகிறேன். அதனால் தான் தமிழ் படங்களுக்கு கவனம் செலுத்த முடியவில்லை என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
Average Rating