காசிமேட்டில் பரபரப்பு இரண்டாவது மனைவி வீட்டில் கட்டிட தொழிலாளி சடலம்!!
இரண்டாவது மனைவி வீட்டில் கட்டிட தொழிலாளி சடலம் தூக்கில் தொங்கியது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறி, முதல் மனைவி மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் காசிமேட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுவண்ணை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் ரவி (46). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராணி (38). இவர்களுக்கு 3 மகன்கள். கருத்து வேறுபாடு காரணமாக ரவி மனைவியை பிரிந்து காசிமேடு திடீர் நகர் பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணை 2வது மனைவியாக ஏற்று அவருடன் குடும்பம் நடத்தி வந்தார். எப்போதாவது ராணி வீட்டிற்கு போய் வருவார்.
இந்நிலையில் நேற்று காலை மகேஸ்வரியின் வீட்டில் ரவி தூக்கில் சடலமாக தொங்கினார். இதையறிந்ததும் அக்கம்பக்கத்தினர் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் ரவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கணவர் இறந்தது தெரிந்து ராணி, மகன்கள், உறவினர்கள் காசிமேடு காவல்நிலையத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்யவில்லை. அவரை அடித்து கொலை செய்துள்ளனர். அவரது சாவில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே விசா ரணை நடத்த வேண்டும் என்று ராணி புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2வது மனைவி மகேஸ்வரியிடம் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் காசிமேட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating