தாம்பரத்தில் பரபரப்பு நிச்சயம் செய்த பெண் பலாத்காரம் திருமணத்துக்கு மறுத்தவர் கைது!!

Read Time:3 Minute, 12 Second

Tamil-Daily-News_52757990361நிச்சயதார்த்தம் முடிந்தபிறகு பெண்ணை பலாத்காரம் செய்தவர், பின்னர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். புகாரின்படி அவரும், அவரது தாய்மாமன், உறவினரும் கைது செய்யப்பட்டனர். தாம்பரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் ஸ்ரீபிரியா (23). இன்ஜினியரிங் மாணவி. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).

ஸ்ரீபிரியாவுக்கும் பழைய தாம்பரத்தை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி நிர்மலுக்கும் (26) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமண நிச்சயம் நடந்தது. அப்போது வரும் ஜூன் 12ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் ஸ்ரீபிரியாவுடன் படிக்கும் மாணவர் சந்தோஷ், அவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஸ்ரீபிரியாவுக்கு நிச்சயம் ஆனதை அறிந்த அவர், பேஸ் புக்கில் முத்துகிருஷ்ணன் என்ற பெயரில் நிர்மலுக்கு மெசேஜ் அனுப்பினார். அதில் ஸ்ரீபிரியாவை தான் காதலிப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

அதை பார்த்த நிர்மல், ஸ்ரீபிரியாவின் குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். இதனால், இரு குடும்பத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சந்தோஷை பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்து, எச்சரித்து அனுப்பினர். பின்னர் இரு குடும்பத்தினரும் சமரசம் பேசி சுமுக முடிவுக்கு வந்தனர்.

இதையடுத்து ஸ்ரீபிரியா வும், நிர்மலும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். அப்போது, நிர்மல் தனிமையான இடத்திற்கு ஸ்ரீபிரியாவை அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார்.

அதன்பிறகு பேஸ் புக் விவகாரத்தை மீண்டும் கிளப்பி ஸ்ரீபிரியாவை திருமணம் செய்ய மறுத்துள்ளார். வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக பெற்றோரிடம் கூறினார். அவர்களும் உறவினர்களும் சம்மதித்தனர். இதையறிந்த, பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மல் மற்றும் அவரது தாய் மாமன் ஜெயபிரகாஷ் (39), உறவினர் பாலசந்தர் (45) ஆகியோரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான நிர்மலின் தாய் சசிகலாவை (45) தேடிவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் எஸ்.ஐ.யுடன் கள்ளத்தொடர்பு: திண்டுக்கல்லில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை!!
Next post இலைக்குள் ஒளிந்திருப்பதை பார்க்கப்போகிறீர்களா ??(PHOTOS)