ஆதம்பாக்கத்தில் கடன் தொல்லையால் சோகம் தாய், மனைவி, மகள் குத்தி கொலை!!

Read Time:6 Minute, 1 Second

Tamil-Daily-News_45496332646கடன் தொல்லையால் தாய், மனைவி, மகளை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு டிராவல்ஸ் அதிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 42வது தெரு வில் உள்ள ஒரு வீட்டின் முதல் தளத்தில் வசித்தவர் சுந்தரேசன் (48). சொந்தமாக 2 கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவரது மனைவி சித்ரா. இவர்களது மகள் தாமிரா (10). இவர்களுடன் சுந்தரேசனின் தாய் தங்கம்மாளும் தங்கி இருந்தார். இலங்கையை சேர்ந்தவர்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரேசன் சென்னை வந்தார். தில்லை கங்கா நகரில் 10 ஆண்டாக வாடகை வீட்டில் வசித்துள்ளார்.

நேற்று காலை 4.30 மணியளவில் பழவந்தாங் கல் , பரங்கிமலை ரயில் தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக எழும் பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தின் சட்டை பாக்கெட்டில் இருந்த டைரியை எடுத்து, அதிலிருந்த செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டனர்.

தில்லை கங்கா நகரை சேர்ந்த ஒருவர் பேசினார். அப்போது, இறந்தவர் சுந்தரேசன் என்பது தெரிந்தது. மேலும் தில்லை கங்கா நகரில் பதற்றமாக இருப்பதும் தெரிந்தது. உடனே ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பரங்கிமலை உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் இளவரசன், தனசெல்வன், ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுந்தரேசன் வீட்டின் கதவு வெளிப்பக்கம் பூட்டியிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு சித்ரா, தங்கம்மாள், தாமிரா ஆகியோர் கழுத்து, மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் 3 சடலங்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சுந்தரேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் சீமா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. பின்னர் போலீ சார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர்.

நள்ளிரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, காப்பாற்றுங்க என சிறுமியின் சத்தம் கேட்டது. உடனே சிலர் எழுந்து சென்று பார்த்தனர். அப்போது ஒருவர் கதவை பூட்டிவிட்டு ஓடியுள்ளார் என்பது தெரிந்தது.

இதனால் தாய், மனைவியை சுந்தரேசன் கொலை செய்ததை மகள் பார்த்து காப்பாற்றுங்கள் என்று கத்தியிருக்க வேண்டும், உடனே மகளையும் அவர் கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

சுந்தரேசன் டிராவல்ஸ் தொழிலுடன் பரிசு பொருட்களை கனடா, இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அனுப்புவதும், அங்கிருந்து பரிசு பொருட்களை வாங்கி இங்கு விற்பனை செய்வதுமான தொழிலையும் செய்து வந்துள் ளார். கொடுத்த சரக்குக்கு பணம் வராததால் சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தொடர்ந்து நடத்த சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். அவர்களிடம் குறிப்பிட்ட தேதியில் பணத்தை தந்துவிடுவதாக கூறியுள்ளார். ஆனால் கொடுக்க முடியவில்லை. இதனால் கடன் தொல்லை அதிகமாக இருந்தது. பணம் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்துள்ளார். விரக்தியில் தாய், மனைவி, மகளை கொன்றிருக்கலாம். பின்னர் அவரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

கொலை நகரமாக மாறியது

ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதி கொலை நகரமாக மாறி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு உஷாராணி கள்ளத்தொடர்பு காரணமாக கொலை செய்யப்பட்டார். ஜனவரி 22ம் தேதி வாசுதேவன் என்பவர் தில்லைகங்கா நகர் சுடுகாட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

குற்றவாளிகள் பற்றி இதுவரை துப்பு துலங்கவில்லை. ஓராண்டுக்கு முன்பு வாட்டர்கேன் சப்ளை செய்பவரின் மனைவியும் கள்ளத்தொடர்பால் 4 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த தொடர் கொலையால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனுஷுக்கு ஸ்ரீதேவியின் பாராட்டு!!
Next post அயல் வீட்டில் தொலைக்காட்சி பார்த்த பெண் மீது 57 வயதான நபர் பாலியல் துஷ்பிரயோகம்!!