பார்சல் தர தாமதமானதால் ஓட்டல் உரிமையாளர் குத்திக்கொலை!!

Read Time:2 Minute, 8 Second

d7469a88-9a3e-4284-8e1c-a8cb1e7d7dc9_S_secvpf.gifபார்சல் தர தாமதமானதால், ஓட்டல் உரிமையாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதில் ரவுடிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சொக்கலிங்கம்(65). ஓட்டல் நடத்தி வந்தார். இவரது ஓட்டலுக்கு, அருப்புக்கோட்டை பெரிய தெருவை சேர்ந்த ராஜா (42), இவரது சகோதரர் சரவணன் (41) நேற்று முன்தினம் இரவு வந்தனர்.

உணவு பார்சல் தருமாறு கேட்டனர். ஓட்டலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பார்சல் கட்டித்தர தாமதம் ஏற்பட் டது. இதனால், இருவரும், சொக்கலிங்கத்திடம் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர், பார்சல் வந்ததும், அதை வாங்கிக் கொண்டு பணம் தர மறுத்தனர். இதையடுத்து, அவர்களுக்கும், சொக்கலிங்கத்துக்கும் தகராறு ஏற்பட்டது. ராஜா, சரவணன் இருவரும் கத்தியால் சொக்கலிங்கத்தை சரமாரியாக குத்தினர். தடுக்க வந்த சப்ளையர் சுரேசையும் (27) குத்தி விட்டு தப்பினர்.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சொக்கலிங்கம் உயிரிழந்தார். சுரேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அருப்புக்கோட்டை டவுன் போலீ சார் வழக்குப்பதிந்து, தலைமறைவான ராஜா, சரவணன் இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், மதுரை சிந்தாமணி பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இருவரும் தேடப்பட்ட ரவுடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்கத் தயார்: அமலாபால்!!
Next post பேங்காக் ஆட்டோ ஷோவில் கிறங்கடித்த அழகிகள்!!(PHOTOS)