துபாய்க்கு 1 1/2 கிலோ “கொக்கைன்” கடத்தி வந்த தாய்லாந்து பெண்ணுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை!!

Read Time:1 Minute, 49 Second

adwd“கொக்கைன்” போதைப் பொருளை கடத்திவந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு துபாய் நீதிமன்றம் 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வந்திறங்கிய ஒரு பெண் பயணியின் நடவடிக்கைகளில் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் தோன்றியது.

இதனையடுத்து, தாய்லாந்து நாட்டை சேர்ந்த அவரை பெண் காவலர்கள் சோதனையிட்ட போது, அவரது உடலில் பிளாஸ்டிக் கவரில் மடித்து வைக்கப்பட்டிருந்த 1 1/2 கிலோ “கொக்கைன்” போதைப் பொருளை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அவரை கைது செய்த பொலிசார், துபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக அந்த பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் திர்ஹம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

10 நாட்களுக்கு முன்னரும் போதைப்பொருள் கடத்திவந்த குற்றத்திற்காக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேறொரு பெண்ணுக்கு இதேபோல் 15 ஆண்டு சிறை தண்டனையும் 2 லட்சம் திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரலாற்றில் பதியப்பட்ட மிக கேவலமான கவர்ச்சி ஆடைகள்!!(PHOTOS)
Next post தந்தையின் மீது கற்பழிப்பு புகாரை கூறிய பாசக்கார மகன்!!