மிருகம் நாயகிக்கு அழைப்பு விடுக்கும் சர்ச்சைக்குரிய இயக்குனர் சாமி!!

Read Time:1 Minute, 50 Second

images (1)தமிழ் சினிமாவில் குறைவான படங்களை இயக்கினபோதும், அத்தனையும் சர்ச்சைக்குரிய படங்களாக இயக்கியவர் சாமி. உயிர். மிருகம், சிந்துசமவெளி என்று அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ஆபாச கதையில் உருவானவைதான்.

அதனால் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வந்த அவர், சிந்துசமவெளிக்குப்பிறகு இனிமேல் அந்த மாதிரியான கதைகளை படமாக்க மாட்டேன் என்று முடிவெடுத்து இப்போது கங்காரு என்றொரு படத்தை மாற்றுக்கதையில் படமாக்கி வருவதாக சொல்கிறார்.

ஆனால் இந்த படத்தில் பத்மப்பிரியா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவருக்கு அழைப்பு விடுக்கும் யோசனையில் இருக்கிறாராம் சாமி.

ஏற்கனவே மிருகம் படத்தில் நடித்தபோது பத்மப்பிரியாவுடன் ஏற்பட்ட வெறுப்பில் ஸ்பாட்டிலேயே அவரது கனனத்தில் பளார் பளார் என்று அறைந்தவர் சாமி.

அதையடுத்து பத்மப்பிரியா கொடுத்த புகாரின்பேரில் அவரை ஓராண்டு படம் இயக்க தடை விதித்திருந்தது சினிமா உலகம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இப்போது மீண்டும் பத்மப்பிரியாவை அழைக்க உள்ளார் சாமி. ஆனால், சாமியோ அழைப்பேன் வந்தால் ஓ.கே இல்லேன்னா வேறு நடிகையை புக் பண்ணி படப்பிடிப்பை தொடங்குவேன் என்றும் கூறி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் செய்ய கொலை மிரட்டல் : மாணவி விஷம் குடித்து தற்கொலை!!
Next post சீனா: கழிவறை குழாயில் உயிருக்குப் போராடிய பச்சிளம் குழந்தை மீட்பு!!