கோடை வெயிலில் சிக்கிக்கொண்ட டாப்ஸி!!

Read Time:2 Minute, 2 Second

imagesஏப்ரல், மே, ஜூன் மாதங்களின் கோடை வெயிலை தாங்கிக்கொள்ள முடியாமல், தமன்னா, காஜல், சமந்தா, அமலாபால், உள்பட பல நடிகைகள் நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து போன்ற குளிர் பிரதேச நாடுகளுக்கு சென்று ஐக்கியமாகி விட்டனர்.

இதனால் அவர்கள் நடித்து வந்த பல படங்கள் இழுபறியில் நிற்கிறது. என்றாலும், கோடை வெயிலின் தாக்கம் குறைந்தால்தான் இந்தியா பக்கமே வருவோம் என்றும் அங்கிருந்தபடியே படாதிபதிகளுக்கு செய்தி அனுப்பிக்கொண்டிருக்கின்றனர் நடிகைகள்.

இந்த நிலையில், நயன்தாரா, டாப்ஸி மட்டும் அஜீத் நடித்து வரும் வலை படத்துக்காக குலுமணாலியில் முகாமிட்டிருந்தனர். அப்போது அஜீத், டாப்ஸி இருவருமே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இதில் அஜீத் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நடித்தபோதிலும், ஜூரம் அதிகமாக இருந்ததால் அங்கிருந்தது வெளியேறி விட்டாராம் டாப்ஸி.

சில நாட்களாக சிகிச்சை பெற்று வரும் அவருக்கு இன்னமும் உடல்சோர்வு போகவில்லையாம். அதனால் தற்போது மும்பையில் இருக்கும் டாப்ஸி, பூரண குணமடைந்த பிறகுதான் குலுமணாலிக்கு வருவேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.

மேலும், வலை படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு மாத சுற்றுப்பயணமாக சில குளிர்பிரதேச நாடுகளுககு டூர் அடிக்கவும் திட்டமிட்டுள்ளாராம் டாப்ஸி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 வருடங்களாக தேள் உட்கொண்டு வாழ்பவர்!!
Next post தனிமையிலிருந்த வயோதிப்பப் பெண் பாலியல் வல்லுறவின் பின் படுகொலை!!