மனைவியை சேர விடாததால் மாமியாரைத் தாக்கிய மருமகன்.!!
Read Time:1 Minute, 15 Second
பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த அன்னலட்சுமிக்கும், 25. தேனி கண்டமனூர் அருகே ஜி.உசிலம்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமிக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. நான்கு வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில், ஓராண்டாக கருப்பசாமி, அன்னலட்சுமியை துன்புறுத்தியதால், பெரியகுளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். தொண்டகத்தி பகுதியில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த அன்னலட்சுமியை, கருப்பசாமி தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.
அன்னலட்சுமி மறுத்துள்ளதால், கல்லால் கை, தலையில் அடித்து காயப்படுத்தினர். தடுக்க வந்த மாமியார் ராஜாத்தியையும், அதே கல்லால் அடித்துள்ளார் . இருவரும் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடகரை போலீசார் கருப்பசாமியை தேடி வருகின்றனர்.
Average Rating