திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழலாம்: ரீமா கல்லிங்கல் அதிரடி!!

Read Time:2 Minute, 0 Second

683473479img2ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை என்கிறார் ரீமா கல்லிங்கல். பரத் நடித்த யுவன் யுவதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ரீமா கல்லிங்கல்.

கேரளா கபே, ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், சிட்டி ஆப் காட், நீலத்தாமரா, 22 பீமேல் கோட்டயம், நித்ரா உள்பட பல மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

ரீமா கல்லிங்கல், 22 பீமேல் கோட்டயம் படத்தில் நடித்தபோது அவருக்கும், அந்த படத்தின் இயக்குனர் ஆஷிக் அபுவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வருகிறார்கள்.

திருமணம் செய்து கொள்ளாமல் இயக்குனர் ஆஷிக் அபுவுடன் சேர்ந்து வாழ்வது பற்றி ரீமா கல்லிங்கல் அளித்துள்ள பேட்டியில், ஒரு ஆணும், பெண்ணும் மனதளவில் இணைந்து, ஒருவரையொருவர் புரிந்து கொண்டபின், சேர்ந்து வாழ்வதில் தப்பு இல்லை.

திருமணம் செய்து கொண்டால் தான் சேர்ந்து வாழ முடியும் என்பதில் எனக்கு உடன்பாடும் கிடையாது. மனதளவில் இணைந்தாலே போதும்.

புரிதல்தான் மிக முக்கியமானது. கருத்து ஒற்றுமையும், புரிதலும் இருந்தால் ஒரு ஆணும், பெண்ணும் தாராளமாக சேர்ந்து வாழலாம். எனக்கு இந்த வாழ்க்கை பிடித்து இருக்கிறது. இதை தொடர்வதுதான் சிறந்தது என்று கருதுகிறேன், என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண்ணை திருச்சிக்கு கடத்தி பாலியல் பலாத்காரம் : அதிமுக சேர்மன் ஒருவருக்கு தொடர்பு!!
Next post போலீசுக்கு தகவல் தந்தவரை அரிவாளால் வெட்டிய கும்பல்!!