15 வயதுச் சிறுமியை கர்ப்பிணியாக்கிய 19 வயது இளைஞன் கைது!!
15 வயதான சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 19 வயதான இளைஞன் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சிறுமி தனது பாட்டியின் துணையுடன் வசித்து வந்தவர் என தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி குறித்த இளைஞன் சிறுமியை பாட்டிக்கு தெரியாது கடத்திச் சென்று வீடொன்றில் வைத்து பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். இதன் பின்னதாக பலமுறை சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுமி இரண்டு மாதம் கர்ப்பிணியாக உள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதன்பின்னராக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Average Rating