ஆட்டோவில் கடத்தி பெண் பலாத்காரம்!!
Read Time:1 Minute, 2 Second
அரியானாவில் ஓடும் ஆட்டோவில் இளம் பெண்ணை நான்குபேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர்.அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தின் ஹனுமன்மந்திர் செக்டர் 25 பகுதியைச் சேர்ந்த இளம் பெண், கடந்த ஞாயிறன்று மளிகை சாமான்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அவரை ஆட்டோவில் வந்த நான்குபேர் கொண்ட மர்ம கும்பல் வலுகட்டாயமாக கடத்திச் சென்று,மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து, காசியாபாத் ரயில்நிலையம் அருகே வீசிவிட்டு சென்றனர்.
இது தொடர்பாக செக்டர் 55பகுதி போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Average Rating