திருத்தணி அருகே கொன்று புதைக்கப்பட்ட கர்ப்பிணி யார்?

Read Time:1 Minute, 58 Second

d43b9a3c-f0a3-4533-a151-caf6f698bf8a_S_secvpfகர்ப்பமாக இருந்த இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்து புதைத்துள்ள சம்பவத்தால் திருத்தணி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருத்தணி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முருகம்பட்டு கிராமத்தின் அருகே வரவு கால்வாய் மீது தேசிய நெடுஞ்சாலை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பள்ளத்தில் சடலம் கிடப்பதாக கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலர் நாகலிங்கத்துக்கு நேற்று தகவல் கொடுத்தனர். இதையடுத்து, நாகலிங்கம் மற்றும் திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு நேற்று காலை விரைந்தனர்.

தாசில்தார் ஜான் சவுந்தர்ராஜன், வருவாய் ஆய்வாளர் தேவராஜ் மற்றும் தடய அறிவியல் உதவி இயக்குனர் அருளானந்தம், இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் முன்னிலையில் பள்ளம் தோண்டினர். அப¢போது இளம்பெண் சடலம் இருந்தது. அதை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இறந்த பெண்ணுக்கு 20 வயது இருக்கும். அவர் 6 மாத கர்ப்பமாக உள்ளது தெரிந்தது. துப்பட்டாவால் கழுத்தை நெரித்துள்ளனர். சிவப்பு கலர் சுடிதாரும் கரு நீல கலரில் துப்பட்டாவும் அணிந்துள்ளார். அவரை பற்றி பெயர், விவரம் எதுவும் தெரியவில்லை. கர்ப்பமாக இருந்த இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்து புதைத்த சம்பவத்தால் திருத்தணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டத்தரணியின் மனைவிக்கு அந்தரங்கத்தை காண்பித்த மூவர்!!
Next post பணிப்பெண்ணாக மனைவியை அனுப்பிவிட்டு மனநோயாளி பெண்மீது பாலியல் துஷ்பிரயோகம்!!