இது திரைப்படத்தில் அல்ல, ஆனால் திரையரங்கில் நடந்தது
Read Time:1 Minute, 21 Second
யாழ்.நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனது மனைவியுடன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் காதலன் எனக்கூறப்படுபவரை அவளது கணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று யாழில் நடைபெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணின் கணவன் கூலித் தொழிலாளி. இவர் கூலித் தொழிலுக்கு காலையில் சென்றால் இரவில் தான் வீடு திரும்புவார்.
இதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திய குறித்த பெண் தனது காதலனுடன் சென்று குசியாக திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
இதனையறிந்த அவரது கணவன் திடீரென கத்தியுடன் தியேட்டருக்குள் புகுந்து தனது மனைவியின் கள்ளக் காதலனை கத்தியால் வெட்டியுள்ளார். காயமடைந்த இவரை அங்கிருந்தவர்கள் ஆட்டோ ஒன்றின் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
Average Rating