சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது

Read Time:1 Minute, 46 Second

love.COUPLES-RUN15 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க தயாராகவிருந்த போது மீண்டும் அவரை பாடசாலைக்கு அனுப்பி வைத்த சம்பவமொன்று கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை ஈச்சிலம்பற்று பாடசாலையொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியான 15 வயது சிறுமி 18 வயதான இளைஞனை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த திருமண ஏற்பாடுகள் தொடர்பில் அப்பிரதேச சிறுவர் பாதுகாப்பு குழுவிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரதேச செயலக திட்டமிடல் கிளையின் பட்டதாரி பயிலுனர் ஒருவர் உடனடியாக சிறுமியின் வீட்டுக்கும் இளைஞனின் வீட்டுக்கும் சென்று இவ்விருவரின் பெற்றோர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

சிறுமிக்கும் இளைஞனுக்கும் சிறுவயதில் திருமணம் செய்வதனால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் சமூக உணர்வுகள் தொடர்பில் விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தினார்.

பெற்றோர்கள் தங்கள் மீதான சமூகப் பொறுப்புக்களை உணர்ந்து கொண்டதுடன் சிறுமியை மீண்டும் கல்வியை தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கு உறுதியளித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தங்க உருண்டைகளை விழுங்கி இந்தியா செல்லவிருந்தவர் கைது
Next post வாஸ் குணவர்தனவின் வெற்றிடத்திற்கு பதில் நியமனம்