கொக்காவில் இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட டொக்டர் சிவசங்கர் விடுதலை

Read Time:2 Minute, 1 Second

Releasdகிளிநொச்சி, கொக்காவில் இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்ட்டிருந்த மருத்துவர் சிவசங்கர் இன்றுகாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில், சட்டமா அதிபரின் பணிப்புக்கமைய முல்லைத்தீவு நீதிமன்றில் நீதிவான் என்.கணோசராசா சிவசங்கரை விடுதலை செய்துள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகப் பணியாற்றி வந்த சிவசங்கர் கிளிநொச்சி கொக்காவில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற உத்தரவின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பெண் உரிமைகள் தொடர்பில் சில ஆய்வுகளை மேற்கொண்டுவந்த மருத்துவர் கொக்காவில் இராணுவ முகாமுக்கு சென்று இராணுவத்தினரிடம் முரண்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த யுவதி ஒருவர் சிவில் பாதுகாப்பு படையில் இருந்து விலகப் போவதாகத் தெரிவித்த நிலையில் குறித்த குடும்பத்தாருடன் சிவசங்கர் முகாமுக்கு சென்றுள்ளார்.

இதன்போதே அவர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பொலிhரிடம்ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாஸ் குணவர்தனவின் வெற்றிடத்திற்கு பதில் நியமனம்
Next post ஆசிரியைக்கு ஜனாதிபதி உறுதி