லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது சிங்களவர் தாக்குதல்
இங்கிலாந்தில் ஐ.சி.சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இலங்கை-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது.
அப்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்க கோரி லண்டன் ஓவல் மைதானம் அருகே ஈழ தமிழர்க்ள போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது, இவர்களுக்கு எதிராக சிங்களவர்கள் தங்கள் நாட்டு கொடியுடன் போராட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில், திடீரென அவர்கள் போராட்டம் நடத்தி கொண்டிருந்த இலங்கை தமிழர்கள்மீது பாய்ந்து தாக்குதல் நடத்தினார்கள்.
அதில், பெண்கள் மற்றும் குழந்தைகளும் தாக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
அதை தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்து வந்து சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்களையும் சிங்களவர்கள் தாக்கினார்கள்.
எனவே, போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்துள்ளனர்.
Average Rating