தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஜேர்மன் விஜயம்

Read Time:1 Minute, 38 Second

tnpf-01ஜேர்மனின் வேக்கப் பவுண்டேசன் என்ற அமைப்பு தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பாக நடத்தவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று ஜேர்மனி பயணமாகியுள்ளனர்.

வேக்கப் பவுண்டேசன் என்ற அமைப்பு தமிழ் அரசியல் கட்சிகளிடையே பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கச் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளையும்; அழைத்து கடந்த நவம்பர், ஜனவரி, மார்ச் ஆகிய காலப்பகுதிகளில் மாநாட்டினை நடத்தியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக இம் மாதம் 22, 23 ம் திகதிகளில் நடைபெறும் மாநாட்டுக்கு வருமாறு விடுத்த அழைப்பினையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் இன்று ஜேர்மனி பயணமாகியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவியான மகளை துஷ்பிரயோகம் செய்தவர் மனைவியை கண்டதால் தற்கொலை முயற்சி
Next post மன்னார் ஆயரின் கருத்துக்கு அரசு கண்டனம்