இலங்கையர்கள் 22 பேர் திருப்பி அனுப்பி வைப்பு
Read Time:1 Minute, 7 Second
கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற மேலும் 22 இலங்கையர்கள் இன்று திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
புகலிடக் கோரிக்கையாளர்களாக அங்கீகரிக்க முடியாதவர்கள் இவ்வாறு திருப்பியனுப்பப் பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடியகல்வு மற்றும் பிரஜாவுரிமை அமைச்சர் பிரன்டன் ஓ கோனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற ஆயிரத்து 270 இலங்கையர்கள் இதுவரையில் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
ஏனைய புகலிடக் கோரிக்கையாளர்களை நவ்றூ மற்றும் மனுஸ் தீவுகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரன்டன் ஓ கோனர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating